×

சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்

சென்னை: சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போதையில் பொதுமக்கள் மீது கற்கள் வீசி இளைஞர் அட்டூழியம் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சரவணனை இளைஞர் தாக்கியுள்ளார். இளைஞரை கட்டையால் தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். இளைஞரின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பியதாக, ஆவடி காவல் ஆணையரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

The post சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர் appeared first on Dinakaran.

Tags : Awadi, Chennai ,Chennai ,Chennai Avadi ,Avadi Housing Facility Board ,Chief guard ,Saravana ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...